Monday, May 24, 2010

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம்

வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் கல்மடு மற்றும் கனகராயன் குளம் பகுதிகளிலுள்ள 570 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலேயே இம்மின் வசதி பெற்றுக்கொடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். அதன்படி, கல்மடுவிலுள்ள 320 வீடுகளுக்கும் கனகராயன் குளத்திலுள்ள 250 வீடுகளுக்கும் இலவசமாக சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை வழங்க சீட் நிறு வனம் முன்வந்துள்ளது.

இதேவேளை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு வவுனியாவிலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார். அடுத்த வாரமளவில் பாலமோட்டை பகுதியில் 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com