பிக்குகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு.
நாட்டு மக்களை காப்பாற்றிய ஜெனரலை உடனடியாக விடுதலை செய் என உண்ணாவிரமிருந்த பிக்குகளை பொலிஸார் அவ்விடத்திலிருந்த பலவந்தமாக வெளியேற்றினர். பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள பிக்குகள் நேற்று மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்று தமது கைது சட்டத்திற்கு முரணானது என முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுனில் வட்டகல : இது தேர்தல் காலம், பொலிஸார் சிவிலில் கடமையில் ஈடுபட முடியாது. அந்த வகையில் சிவிலுடையில் வந்த பொலிஸார் பிக்குகளை அள்ளிச் சென்றது சட்டவிரோதமானது. அத்துடன் நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்படமுன்னர் அவர் மீதான குற்றச்சாட்டு தெரியப்படுத்தப்படவேண்டும். ஆனால் பிக்குகள் மனிதாபினானமற்று முறையில் தாக்கப்பட்டு அள்ளிச் செல்லப்பட்டார்கள். இது தொடர்பாகவே நாம் மனித உரிமை வழக்கு தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment