Thursday, April 8, 2010

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு சீனா ஆதரவு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அங்கு சீன அயலுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியேச்சியை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சீன பிரதமர் வென் ஜியாபாவோவையும் சந்தித்துப் பேசினார்.

இருவருடனான சந்திப்பின்போதும்,ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சீனாவின் ஆதரவை கோரினார் கிருஷ்ணா. அதனை ஏற்றுக்கொண்ட சீனத் தலைவர்கள் இருவரும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு சீனா தனது ஆதரவை தெரிவிக்கும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சீன அயலுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியேச்சியுடனான சந்திப்புக்குப் பின்னர், இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையே 'ஹாட் லைன்' போன் வசதி செய்து கொள்வது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com