Thursday, April 8, 2010

நண்பகல் வரை 35 - 40 % வாக்குகளிப்பு இடம்பெற்றுள்ளது. பஃரல் யாழில் 13%

நாடுபூராகவும் இன்றுகாலை ஆரம்பமான இலங்கையின் 7 வது பாராளுன்றுக்கான பொதுத்தேர்தலில் நண்பகல் வரை நாடளாவிய ரீதியில் 35 - 40 வீதம் வாக்காளர்கள் தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம் யாழ் குடாநாட்டில் பிற்பகல் 1 மணிவரை 13% விழுக்காடு வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் நண்பகலுடன் 50 மூ மேலதிகான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதாகவும் அவர்களின் பெரும்பாலான வாக்குகள் அரசாங்கத்திற்கே அளிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

நாட்டின் ஜனாதிபதி ஏதிர்கட்சி தலைவர் ஆகியோர் தமக்கு சொந்தமான வாக்களிப்பு நிலையங்களுக்கு குடும்பசகிதம் சென்று வாக்களித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com