Saturday, March 20, 2010

தேர்தல் பிரச்சாரங்களில் வெளிநாட்டுப் புளொட்டுக்கள்.

வடகிழக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், புளொட் இயக்கத்தினரின் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து புளொட் இயக்க அங்கத்தினர் பலர் வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள பலர் இலங்கை அரசின் அனுசரணையில் சுயேட்சைக் குழுக்களாக தேர்லில் போட்டியிடும் நிலையில் வெளிநாடுகளிலிருந்து சென்றுள்ள புளொட் இயக்கத்தினர் இம்முறை தமது அமைப்பினரின் பாராளுமன்ற பிரவேசத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதனை நோக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். வன்னியின் பல பிரதேசங்களுக்கும் நேரடியாக மக்களிடம் செல்லும் அவர்கள் அம்மக்களுக்கான அரசியல் விளக்கங்களை கொடுத்துவருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com