Wednesday, March 24, 2010

முன்னாள் இராணுவ அதிகாரிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்.

ஜெனரல் பொன்சேகா தலைமையில் இராணுவப் புரட்சி ஒன்றை உருவாக்கி அரசாங்கத்தை கவிழ்க்க திட்டுமிட்டதாக குற்றஞ்சுமத்தி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் குழுவொன்று தாம் கைது செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானதும் தமது அடிப்படை உரிமைகளை மீறியதுமான செயல் என அடிப்படை மனித உரிமை வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயத்தில் கடமை புரிந்த 22 பேர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com