Wednesday, March 24, 2010

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு: ஊர்காவல் படையினர் பலி.

அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வீரகொட பொலிஸ் காவல் நிலையப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஊர்காவற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் பொது மகன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட பொலிஸ் காவல் நிலையத்தில் நேற்றிரவு முச்சக்கரவண்டியை நிறுத்தாமல் சென்றபோதே பொலிஸார் துப்பாக்கி பியோகம் மேற்கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com