Friday, February 5, 2010

அரசியல் ஓய்வுக்கு கருணாநிதி நோட்டம்?

தமிழ்நாட்டை ஆளும் திமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 20ம் தேதி கூடுகிறது. அந்தக் கூட்டம் கட்சியின் மிகமுக்கிய வரலாற்று நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் ஓய்வு பற்றி திட்டவட்ட மான அறிகுறி அந்தக் கூட்டத்தில் தெரியவரும் என்று கட்சியினர் சொல்கிறார்கள்.

கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்று முதல்வரின் புதல்வரும் துணைப் பிரதமருமான மு க ஸ்டாலின் சொல்லி வருகிறார். அடுத்த தேர்தலில் வென்று கருணாநிதியே மீண்டும் முதல்வராகப் பொறுப்பு ஏற்பார் என்று திமுக தென் மண்டலத் தலைவர் முக அழகிரி அண்மையில் தெரிவித்தார்.

பிப்ரவரி பொதுக் குழு கூட்டம் பற்றி அறிவித்த திரு கருணாநிதியோ, கூட்டத்தில் கட்சியில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று கேட்டபோது, “கட்சி பெயரில் மாற்றம் இராது. அது அப்படியே தொடரும்,” என்று சொன்னார்.

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி திட்டவட்டமாக திரு கருணாநிதி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அரசியல் ஓய்வு பற்றி சரியான நேரத்தில் சரியான இடத்தில் அறிவிப்பேன் என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் பற்றி பொதுக்குழுக் கூட்டடத்தில் கட்சியினரிடம் இருந்து கருத்துகளை நேரடியாகத் திரட்ட திரு கருணாநிதி கருதுகிறார் என்று சொல்லப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com