Friday, January 29, 2010

பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்த 13 இராணுவத்தினர் கைது.

கணனிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.
விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடி யினரால் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் சோதனைக்குட் படுத்தப்பட்டிருந்தது. அலுவலகத்தை சோதனையிட்ட அதிகாரிகள் பொன்சேகாவின் அலுவலகத்தில் வேலை செய்த 13 இராணுவத்தினரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சோதனை இடம்பெற்றபோது சுமார் 30 ஓய்வு பெற்ற இராணுவத்தினர் அங்கிருந்துள்ளர். ஓய்வு பெற்ற இராணுத்தினர் எனும்போது, அரச சேவையில் 20 வருடங்கள் சேவை முடிந்தவுடன் ஒருவர் ஓய்வு பெற முடியும். அவ்வாறு ஒய்வு பெறுபவர்கள் தமது 55 வயது வரும் வரை ஓய்வூதியப் பணத்திற்காக காத்திருக்கவேண்டும். அச்சமயத்தில் அவர்கள் வெளிநாடுகளில் அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில்களை புரிவது இலங்கையில் இன்று நடைமுறையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் அலுவலகத்தில் பாவனையில் இருந்த கணனிகள், டிஸ்கட்டுகள் சீல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சிஐடி யினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமனா சிறிலால் லக்திலக தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் சோதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு ஊடகவியலாளர்கள் சகிதம் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், றவுப் ஹக்கீம் , கரு ஜெயசூரியா ஆகியோரை விசேட அதிரடிப் படையினர் அலுவலகத்தினுள் அனுமதித்திருக்க வில்லை என்பது குறிப்பிடத்தாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com