Friday, January 29, 2010

மகின்த சகோதரயாவுக்கு ஒரு அவசர மடல். - யஹியா வாஸித் –

ஆச்சரியம் - 1 26ம் திகதி காலை எட்டுமணிவரை மக்கள் அமைதியாகவே இருந்தனர். யார், யாருக்கு வோட்டு போடுவது, யார் யாருக்கு வேட்டு வைப்பது என்பது சம்பந்தமாக யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவே இல்லை. அரசியல் வாதிகளும், அரசியல் பேச்சாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும்தான் தொண்டை கிழியவும், பத்திரிகைகள் கிழியவும் கத்திக் கொண்டிருந்தனர். ரோட்டெல்லாம் மகிந்த சகோதரர்களின் கட்டவுட்டுகளும், தோரணங்களும். ஆனால் குசு குசுப்புகளெல்லாம் ஜெனரல்பற்றித்தான். பச்சைக்கட்சியினர் எப்போதும் குசு குசுப்புகளை பரவவிடுவதில் கெட்டிக்காரர்களாச்சே. அதனால் மக்களெல்லாம் கப்சிப். வந்தாலும் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் அடக்கியே வாசித்தார்கள். ரொம்ப அவதானமாகவும் வாசித்தார்கள். மக்கள் என்ன முட்டாள்களா, தங்கள் பிள்ளைகளை மீண்டும் ஒரு முறை களுவிலேற்ற. அதனால் மொத்த போட்டையும் கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு போட்டுள்ளனர். ஆம் அவர்கள் நாட்டில் அமைதியும்இ சமாதானமும் தொடரவேண்டுமென முடிவெடுத்துள்ளனர்.

ஆச்சரியம் - 2 ஆம் சிங்கள பாமர மக்கள் ரொம்ப கவனமாகவே தங்கள் வாக்குகளை பாவித்தார்கள். 20 வருடங்களாக வடக்கில் இருந்து சவப்பெட்டிகளில் தினமும் பொணம் வருவதும், இந்த சிங்களத்திகளெல்லாம் அழுது சாவதும், புருஸனைத் தொலைத்தவள், பிள்ளையை தொலைத்தவள், அப்பனையே காணத பிள்ளைகள், பிள்ளைகளே என்ன நிறம் எனத்தெரியாமல் செத்த சிங்களவன், என செத்து செத்து மடிந்து உருகிய சிங்கள சமூகத்துக்கு, டோன்ட்வொறி, இனி நீங்கள் மூச்சு விடலாம் என வழிகாட்டிய மவராசனுக்கு வோட்டு போடாமல், வேறு எந்த நாய்க்கு போடுவது என மனதுக்குள் திட்டி விட்டு, தங்கள் வாக்குகளை போட்டுள்ளார்கள். சீனி விலை 110 ரூபா, தேங்காய் விலை 38 ரூபா, வெங்காயம் கிலோ 140 ரூபா, அரிசி விலை 95 ரூபா, மாவு விலை 70 ரூபா, லாம்பெண்ணை போத்தல் 52 ரூபா என்பதில் தொடங்கி, குடும்ப ஆட்சி நடக்கின்றது என்பது வரை நம்ம தொப்பி மாத்திகள் ( சம்பந்தன், மனோ கணேசன், செல்லச்சாமி தொடக்கம் ஜேவிபி, றவுப் ஹக்கிம் வரை ) எவ்வளவோ மந்திரங்கள் ஓதிப்பார்த்தார்கள். யாரும் கேட்கல. அல்லது யாருக்கும் அது ஒரு பொருட்டா தெரியல. அப்பாவி மக்களுக்கு நிம்மதி தேவைப்பட்டது. அதனால்தான் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

ஆச்சரியம் - 3 கட்டுக்கதைகளோ ஏராளம்இ ஏராளம். மே 2009 முள்ளிவாய்க்கால் சமயத்தில் பல கற்பனை மன்னர்கள் சொன்னார்கள். தலைவர் கிட்டத்தட்ட ஒரு ரெண்டாயிரம் பேரோட காட்டுக்குள்ள எறங்கிட்டார். ஒரு 500 பேர் ஓள்றெடி கிழக்குக்கு போயிட்டாங்க, நாளை மறுதினம் இருக்கிது சிங்களத்துக்கு ஆப்பு என்ற அதே கற்பனை மன்னர்கள்இ ஜனவரி 20 களிலும் கதைகளை உலவ விட்டார்கள். ஜெனரல் கிட்டத்தட்ட ருவண்டி லக்சால வெல்லுவார் என. பாவம் பிடித்த முயலையே இன்னும் பிடித்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்கள். ஆனால் மக்கள், அப்பாவி மக்கள் ஆணித்தரமாக முடிவெடுத்து உங்களுக்கு வோட்டளித்துள்ளனர். ஆம் அவர்களது கனவுகள் கலையக் கூடாது.

ஆச்சரியம் - 4 26ம் திகதி நள்ளிரவு ( 27 அதிகாலை ) 1.30க்கே ஒரு செய்தி காதைக்கடித்தது. வாட்டசாட்டமான அந்த உயர்ந்த மனிதர், தப்பித்தவறி தான் தோற்றுவிட்டால்இ நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரஇ றான்ஸ் ஏசியா ஹோட்டலில் இருந்து கொண்டு திட்டம் தீட்டியதாகவும், ஹோட்டல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும். பின்னர் 27இ 28ம் திகதிகளில் வேறு வேறு செய்திகள் வந்து, கட்டுக்கதைகள் றெக்கைகட்டிப் பறக்க, ஜெனரல் அறிக்கை விட, றவுப் ஹக்கீம் அவர்கள் தேர்தல் ஆணையாளரைக் காணவில்லை என சக்தி ரிவியில் பேட்டி கொடுக்க, 27ம் திகதி பி.ப. 6.30 க்கு தேர்தல் ஆணையாளர் ரிவியில் தோன்றி, அனைத்தும் முடிந்ததுஇ ஒப்பரேஷன் சக்ஸஸ், நோயாளிகளும் நலம். மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் ஜனாதிபதியானார் என சொல்லிவிட்டுப் போனார். ஆம் நாடு அமைதியாகவே இருக்கிறது. மக்களும் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான தலைவன் வேண்டும்.

ஆச்சரியம் – 5 ஆம் மீண்டும் ஒருமுறை, ஆனால் ரொம்ப வித்தியாசமாக முழுக்க முழுக்க சிங்கள பாமர மக்களும், அரச உத்தியோகத்தர்களும் மட்டும் சேர்ந்து, கைகோர்த்து உங்களை ஜனாதிபதி ஆக்கியுள்ளனர். இந்த வெற்றியில் ஒரு கிள்ளுக் கீரையளவுக்கு கூட எங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை வட, கிழக்கு மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர். வடக்கில் வசந்தம். கிழக்கில் பாந்தம் என எவ்வளவோ திட்டங்களை மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கொண்டு வந்தும், அது எங்களை வந்து சேரல அல்லது அது எங்களுக்கு தெரியல என்பதுபோல் மக்கள் எதிர்தரப்புக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு அரைச்ச மாவையே திரும்ப, திரும்ப அரைத்துக் கொண்டிருக்க பிடிக்கல என்பதை வோட்டு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர். நான் வடக்கில் இருந்து புதிய தலைவர்கள், புதிய இரத்தங்கள் உருவாகி என்னுடன் பேசவருவதை விரும்புகின்றேன் என திரு.மகின்த ராஜபக்க்ஷ அவர்கள் மேடைகளில் பேசியதை அப்படியே உள்வாங்கி, அதை வெளியே சொன்னால் தங்களையும் தூக்கிவிடுவார்களோ என்ற பயத்தில், வோட்டு மூலம் அம்மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர். அதனால் அவர்களை, அந்த மக்களை பழிவாங்கவோ, தண்டிக்கவோ முயற்சிக்காமல், தேர்தல் மேடைகளில் நீங்கள் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற அஸ்திரத்தை பாவிக்க வேண்டும். இனம் என்பது முகம், மொழி என்பது முகவரி என்பதை தெளிவுபட வட-கிழக்கு மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அது கவனிக்கப்பட வேண்டும். அங்கு புதிய இரத்தங்கள் பாய்ச்சப்பட வேண்டும்.

ஆச்சரியம் - 6 தேர்தல் மேடைகளில் ஏட்டிக்கு போட்டியாக வாக்குறுதிகள் தரப்படுள்ளன. கடந்த 26ம் திகதிவரை மக்களே இன்னாட்டின் மன்னர்களாக இருந்தனர். யாரிடமும் பேச முடியல. எல்லோரும் நெஞ்சை நிமிர்த்தி நடந்து கொண்டிருந்தார்கள். தலைவர்களெல்லாம் மக்களை கும்புடு போட்டுக்கொண்டிருந்தார்கள். 27ம் திகதி உங்களை மவராசனாக்கி, வாக்குறுதிகளை எப்போ நிறைவேற்றப் போகின்றீர்கள் என கண்கொத்திப்பாம்பாக இனி இருக்கப் போகின்றார்கள். ஆம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கிடையில் வாக்குறுதிகளில் கணிசமான அளவு நிறைவேற்றப்பட வேண்டும். எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலைக்கும், எங்கள் நாட்டிலேயே உற்பத்தியாகவும் வசதி செய்து தரப்பட வேண்டும் என, வாக்குகள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆச்சரியம் – 7 மலையக மக்கள், மலையகத் தலைவர்களுடன் ரொம்ப கோபமாக இருப்பது இத்தேர்தல் மூலம் தெரிகின்றது. சம்பள உயர்வு இழுத்தடிப்பு, மலசல கூட வசதிகள், ஆங்கில பாட நெறி, உயர்பாடசாலைகள், தொழில்கல்வி என்பன இன்னுமே எங்கள் லயன் பிள்ளைகளுக்கு கிடைக்கல என்பதை தொண்டமான்களுக்கு சொல்லியுள்ளனர். அது பாராளுமன்றத் தேர்தல்களுக்கிடையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆச்சரியம் – 8 குடும்ப ஆட்சி, முதலீட்டாளர்களிடம் பாரிய கொமிஷன் பறிக்கப்படுகின்றது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சிறிலங்காவை விற்கப் போகின்றார்கள் என ஆயிரத்தெட்டு குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டும்இ அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு, அமெரிக்காவுக்கு எங்களை விற்காதே தலைவா என உங்களை தூக்கி நிறுத்தியுள்ளார்கள். அதனால் அடுத்த நிகழ்வுகளும், நிகழ்ச்சிகளும் பாமர மக்களின் மூன்று வேளை கஞ்சிக்கு வழிவகுக்கப் படவேண்டும்.


ஆச்சரியம் – 9 நாட்டில் பெரிய கலவரம் வரப்போகின்றது, ஜெனரல் குறுப் வென்றாலும், தோத்தாலும் உண்டு இல்லை என பண்ணி விடுவார்கள். அன்றாட தேவைக்குரிய பொருட்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு வதந்தியும் பரவியது. மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. அட போங்கப்பா என வதந்திகளை தூக்கிவிசீவிட்டு ஆசுவாசமாக நாடுமுழுக்க திரிகின்றார்கள். அது தொடர வழி செய்யப்பட வேண்டும்.

இத்தேர்தலில் என்றுமில்லாதவாறு உங்களால், பொருளாதார முன்னேற்றம்தான் எனது குறி, தலாவீத வருமானத்தை 2500 யுஎஸ் டொலராக மாற்றுவேன், வெளிநாடுகளுக்கு 2 இலட்சம் பேரை அனுப்புவேன். குறிப்பாக கொரியாவுக்கு ஒரு லட்சம் பேர் அனுப்பப்படுவார்கள், 5 லட்சம் பேருக்கு அரச, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவேன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு, வெளிநாட்டிலுள்ள எம்மவரை முதலிட அழைப்பு என பாரிய பட்டியலே தந்துள்ளீர்கள். மக்கள் எல்லாம் இனி உங்கள் செயல்பாடுகளை நோக்கப் போகின்றார்கள். ஆம் மிக கவனமாக இனி நோக்குவார்கள்.

ஆம் நாளைய பொழுது எங்களுக்காக உதிக்க வேண்டும், இனி உதிக்கின்ற சூரியன் எங்களுக்காக உதிக்க வேண்டும், அப்படி நீங்கள் உதிக்க வைத்தால்தான் வருகின்ற சந்ததியினர் உங்கள் புகழ் பாடுவார்கள். பாட வைப்பீர்களா ?

( சபாஷ் சரியான போட்டி என்ற தலைப்பில் தேர்தலுக்கு 25 நாட்களுக்கு முன் 01-01-2010ல் நாம் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி இங்கே பிரசுரிக்கப்படுகின்றது : இப்படி நாடு பூராவும் ஏட்டிக்குப் போட்டியாகவே மேடைகள் களை கட்டுகின்றது. ஆனால் மக்கள் அடக்கியே வாசிக்கின்றார்கள். ஒன்று ஓடர் போட்டது. மற்றது ஓடரை கெரியவுட் பண்ணியது. ஓடர் போட்டவர் நல்லவரா ? ஓடரை கெரியவுட் பண்ணியவர் வல்லவரா ? மக்களுக்கு மூச்சு முட்டுகின்றது. முடிவுகள் எடுக்க சிரமப்படுகின்றாரகள். ஹோட்டல்கள்இ சலூன்களில் 'இங்கு அரசியல் பேசவேண்டாம் பிளீஸ்' என அட்டைகள் தமிழிலும், சிங்களத்திலும் தொங்குகின்றது.

ஆனால் நிறையப்படித்த, விடயம் புரிந்த பலரும் ஆளும் கட்சிஇ மீண்டும் ஒரு தரம்தான் ஆளட்டுமே என மனம் திறக்கின்றார்கள். குடும்ப ஆட்சிதான் என்றாலும், எப்படி, எப்படி, எங்கெங்கு ஆப்பு வைக்க வேண்டுமோஇ ஆப்பு வைத்துஇ 30 வருட பொருளாதார சீரழிவை நிவிர்த்தி செய்தவர்களாச்சே. நாட்டையும் ஒரு சிங்கப்பூராகவோ, ஹொங்கொங் ஆகவோ மாற்றுவார்கள் அது நிச்சயம் என அடித்துச் சொல்கின்றார்கள்.

இப்போது பிரச்சனைகள் எல்லாம் அரசியல் ஆய்வாளர்களுக்கும்இ சிறுபான்மை கட்சிக்காறர்களுக்கும்தான். ஆம் எப்போதும் பந்து அரசிடம்தான் இருக்கும். நீ முதலில் வீசு பந்தை நாங்கள் முடிவு எடுப்போம் என, புலிகளை மனதில் வைத்துக் கொண்டு அரசை மிரட்டுவார்கள். ஆனால் இம்முறை பந்தை மே 17ல்இ ஆய்வாளர்களையும், சிறுபான்மைக் கட்சிக்காறர்களையும் நோக்கி ஆளும் கட்சி வீசிவிட்டது.

இப்போது பந்தை, விக்கட் கீப்பரை நோக்கி வீசுவதா அல்லது அம்பயரின் மூஞ்சை நோக்கி வீசுவதா எனத் தெரியாமல் மொத்த போளர்களும் முழி முழி என முழித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 65 வீதமான மக்கள் மிக மிக தெளிவாகவே இருக்கின்றார்கள். கொழும்பில் இருந்து ஓடர் போடப்பட்டதால்தான்இ முள்ளி வாய்க்காலில்இ அது கெரியவுட் பண்ணப்பட்டது. ஓடர் போடப்படவில்லையானால்இ அது அங்கு கெரியவுட் பண்ணப்பட்டிருக்காது. எனவே ஓடர் போட்டவர்தான் பெஸ்ட், அதை கெரியவுட் பண்ணியவர் ஒரு வேஸ்ட் என அளகாகவே விளக்கம் சொல்கின்றார்கள் )


30-01-2010

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com