Friday, December 25, 2009

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


இலங்கை மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் 2010 கல்வியாண்டிற்கான பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு இந்திய அரசு புலமைப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இப்புலமைப் பரிசில்கள் 40 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கான இப்புலைமைப்பரிசில்களுக்கான தெரிவினை இலங்கை கல்வியமைச்சின் ஆலோசனையுடன் இந்திய தூதரக அதிகாரிகளே மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை உயர்கல்வியமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அல்லது இந்திய தூதரக இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். (இணையத்தள முகவரி: www.mohe.gov.lk) தெரிவு செய்யப்படுவோருக்கான கற்கைநெறி , தங்கமிடம் , புத்தங்கள் , உணவு என்பவற்றிக்கான செலவுகள் இந்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com