Friday, December 25, 2009

இரு தசாப்தங்களின்பின் மீண்டும் இயங்கும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம்

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் (கச்சேரி) கடந்த இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் முழுமையாக அரசாங்க சிவில் நிர்வாகத்தின் கீழ் தொழிற்படத் தொடங்கியுள்ளது. யுத்தத்தின்போது சிதைவடைந்த கிளிநொச்சி மாவட்டச் செயலகம் புனரமைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி அரச அதிபர் உட்பட கச்சேரியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இதுவரை வவுனியாவிலிருந்தே கடமைக்குச் சென்றுவந்தனர். தற்போது 50 உத்தியோகத்தர்களுடன் மாவட்டச் செயலகம் இயங்குவதாக அரச அதிபர் கூறினார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கீழ் பூநகரி, கரைச்சி, பச்சிளைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com