த.தே.கூட்டமைப்பின் உதவியை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சி.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இத் பொருட்டு ஜனாபதி மஹிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளதாகவும் தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 4ம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு சொல்வதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வித கொள்கைகளும் இல்லாத நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் கூட்டமைப்பினால் எந்த ஒரு வேட்பாளருடனும் பேரம் பேச முடியாது முடியாது என்பது தெட்டத்தெளிவு.
0 comments :
Post a Comment