அரசினுள் இருந்து அரசிற்கு எதிராக எழும் குரல்கள்.
வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளை கொன்றொழிக்குமாறும் அவர்களுக்கு சரணடைய இடம்கொடுக்க வேண்டாம் எனவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய 58ம் படையணியினருக்கு அறிவுறுத்தியிருந்தாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்ததாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி சகல தரப்பினரது புருவங்களையும் உயர்த்தவைத்திருந்ததுடன், நீதிக்கு புறம்பான கொலைகளுக்கான ஐ.நா வின் விசேட பிரதிநிதி பிலிப்ஸ் அல்ஸ்ரன் இலங்கை அரசை விளக்கம்கோரி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
குறிப்பிட்ட இக்கடிதத்திற்கு பதிலெழுதிய அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலர் பேராசிரியர் ரஜீவ விஜெசிங்க, குறிப்பிட்ட செய்தியை ஜெனரல் மறுத்துரைத்துள்ளதுடன், அச்செய்தியை வெளியிட்டிருந்த பத்திரிகையும் அவரது மறுப்புரையை பிரசுரித்துள்ளது. எனவே குறிப்பிட்ட செய்தியினை அடிப்படையாக கொண்ட தங்களது விளக்கம்கோரலை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என வேண்டப்பட்டிருந்ததுடன், கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கும் வினியோகிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் ஜெனரல் சரத் பொன்சேகா அவ்வாறு தெரிவிக்காது இருந்திருந்தால் , குறிப்பிட்ட பத்திரிகையாளர் அவ்வாறானதோர் செய்தியை வெளியிட்டிருக்ககூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவின் கூற்று மற்றும் அவர் ஐ.நா விற்கு பதில் எழுதிய விடயங்களில் அரசு அதிருப்தி அடைந்துள்ளதுடன். அவருக்கு அவ்வாறு கடிதம் எழுதுவதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவரது அமைச்சர் மஹிந்த சமரசிங்க அக்கடிதம் ஐ.நா விற்கு அனுப்பப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment