ஜெனரல் பொன்சேகாவின் வடகிழக்கிற்கான தேர்தல் பிரச்சாரங்கள் அடுத்தவாரம்.
கிளிநொச்சி உட்பட வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் அடுத்தவாரம் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் 2ம் திகதி புனித நல்லூர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு தனது பிரச்சார பணிகளை அவர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் 10 மணிக்கு ஆலய திருவழிபாடுகளின் பின்னர், யாழ் பல்கலைக்கழக மணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களச் சந்தித்து பேசவும் அதன்பின்னர் யாழ் தமிழ்-முஸ்லிம் வர்த்தக சங்கதினருடனும் பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2 பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்பாணத்தில் பகிரங்க கூட்டம்.
ஜனவரி 3 முற்பகல் 10.00 மணிக்கு மன்னார் நகரில் பகிரங்க கூட்டம்.
ஜனவரி 3 பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா நகரில் பகிரங்க கூட்டம்.
ஜனவரி 4 கிளிநொச்சியில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முடிவில்லை.
ஜனவரி 5 பிற்பகல் 02.00 மணிக்கு மட்டக்களப்பு நகரில் பகிரங்க கூட்டம்.
ஜனவரி 5 பிற்பகல் 03.00 மணிக்கு அம்பாறை நகரில் பகிரங்க கூட்டம்.
பின்னர் திருமலை, மூதுர் பிரதேசங்களிலும் பிரச்சாரங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி பிரதேசத்திற்கான பிரச்சார முகாமையாளரக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினைச் சேர்ந்த நூர்தீன் மசூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இக் கூட்டங்களில் எதிர்கட்சிகளின் சகல தலைவர்களும் கலந்த கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment