ரஜீவ விஜேசிங்க மங்கள சந்திப்பு.
மனித உரிமைகள் அமைச்சகத்தின் செயலாளர் ரஜீவ விஜெயசிங்கவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) தலைவர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் நோக்கம் , பெறுபேறுகள் இதுவரை வெளிவராதபோதும் இருவரும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
ஜெனரல் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்தாக சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த கருத்து தொடர்பாக ரஜீவ விஜெயசிங்க ஐ.நா விற்கு கடித் ஒன்றினை எழுதி அக்கருத்தினை சரத் பொன்சேகா மறுத்துரைத்திருக்கும் காரணத்தால் ஐ.நா தமது விளக்கம் கோரலை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்துடன் ஊடகங்களுக்கும் தனது கருத்தை தெரிவித்திருத்தார்.
இது தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ள அரசாங்கம் அவர் எழுதிய கடிதத்தை நிறுத்தி வைத்துள்ளதுடன் இவர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக இவ்வாறு செயற்பட்டுள்ளாரா என சந்தேகத்தையும் எழுப்பியுள்ள நிலையில் குறிப்பிட்ட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment