கள்ள மட்டை மோசடியின் பின்னணியில் சிவாஜிலிங்கம் நாடுகடத்துப்பட்டாரா?
லண்டனிலிருந்து இலங்கை திருப்புகையில் இந்தியாவினுள் நுழைய முற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு இந்தியாவினுள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவினுள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணம் இவர்கடந்த காலங்களில் இந்தியாவில் கள்ள வங்கி மட்டை மோசடிகளில் ஈடுபட்டமையாக இருக்கலாம் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பல முதலீடுகளைச் செய்துள்ள சிவாஜிலிங்கம் தனது வியாபாரத் தொடர்புகளுடாக பலகோடி ரூபாக்களை கள்ள மட்டை மூலமாக சம்பாதித்துள்ளதாகவும், குறிப்பிட்ட கள்ள மட்டைகளை அவர் புலிகளின் முகவர்களிடமிருந்தே பெற்றுவந்ததாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கள்ளமட்டை மோசடியில் சிலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களுக்கும் சிவாஜிலிங்கத்திற்குமான தொடர்புகள் ஊர்ஜிதப்படுத்தப்படும்போது அவரை கைது செய்ய நேரிடும் என கருதிய அதிகாரிகள், இலங்கையில் அதிபர் தேர்தல் இடம்பெறவிருக்கின்ற தருணத்தில் அந்நாட்டின் வேட்பாளர் ஒருவரை இவ்வாறான மோசடி குற்றச்சாட்டில் கைது செய்தால் அது முழு இலங்கைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் என்ற நோக்கில் வீசா மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பியிருக்கலாம் என நோக்குனர்கள் கருதுகின்றனர்.
0 comments :
Post a Comment