Thursday, November 5, 2009

புனித ஹஜ் யாத்திரிகர்களுக்காக விசேட டேமினல்கள்

இது புனித ஹஜ் யாத்திரைக் காலம் உலகம் முழுவதும் இருந்து இலட்ச்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கா நகரம் சென்றவண்ணமுள்ளனர். இவ்வாறு உலக முழுவதிலுமிருந்து வரும் ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்பதற்காக புதிய ஏழு டேமினல்களை நவீன வசதிகளுடன் சவூதி ஜித்தா விமான நிலையம் திறந்துள்ளது.

ஜித்தா கிங் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய டேமினல்கள் ஒரு மணித்தியாளத்திற்கு 3700 யாத்திரிகர்களை கையாளக்கூடியதாகவும். அத்துடன் பழைய டேமினல்களும் இயங்கிவருகின்றது.

இதுவரை புனித ஹஜ் யாத்திரைக்காக சுமார் 200,136 யாத்திரிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து 856 விமானங்களில் ஒக்டோபர் 20ம் திகதிவரை வந்திறங்கியுள்ளனர்.

யாத்திரிகர்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட விசேட கமராக்கள் மூலம் இதுவரை இனம் காணப்பட்ட பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்கள் விசேட அறைகளில் வைக்கப்பட்டு அவர்களுக்கு வைத்திய உதவிகளை சவூதி சுகாதார அமைச்சு வழங்கி வருகின்றது.

தற்போது அமைக்கப்படும் புதிய விமான நிலைய விஸ்தரிப்பு நிறைவுபெறும் நிலையில் உள்ளது இது நிறைவடைந்தால் விசேடமாக 13 டேமினல்களும், 10 ஓடக்கூடிய பாலங்களும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்காக பயன்படுத்தப்படும்.

நன்றி - கலீஜ் டைம்ஸ்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com