Thursday, November 5, 2009

ஜெனரல் சரத் பொன்சேகா நாடுவந்தடைந்தார்.

அமெரிக்காவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அதி முக்கிய நபர்களுக்கான பாதையூடாக வந்திறங்கிய அவர் அமோக வரவேற்புடன் விசேட பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருடைய வருகையை படம்பிடிப்பதற்கும், கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தனியார் ஊடகங்கள் பல அங்கு காத்திருந்த போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ் சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பாக நேர்காணல் ஒன்றிற்கு வருமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க Homeland Security பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ் அழைப்பை அவர் நிராகரித்து வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் அமெரிக்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி முயற்சியை அரசு எவ்வாறு முறியடித்தது என பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டி அறிவிக்கப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com