ஜனாதிபதிக்கு எதிரான கருத்தை பதிவு செய்த இளைஞன் கைது.
இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியில் கருத்துக்கள் (comments) பகுதியில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அதன் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோருக்கு எதிரான கருத்தினை பதிவு செய்த இளைஞன் ஒருவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மாதளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 06 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
இளைஞன் அளவுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment