Monday, November 2, 2009

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

இலங்கையில் அண்மையில் டெங்கு காய்ச்சல் பரவி இருநூற்றுக்கு அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர். இந்தக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார அமைச்சு ஒவ்வொறு பிரதேச மட்டத்திலும் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

அண்மையில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் டெங்கு காய்ச்சல் மீண்டும் பெருகும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது இதனால் பொது மக்கள் மிகவும் விளிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுவரை டெங்குக் காய்சலினால் இலங்கையில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் இறந்ததுடன் கம்பஹா மாவட்டதில் மட்டும் ஐம்பதைந்து அதிகமானோர் மரணமடைந்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com