தீர்வு விடயமாக பேசுவதற்கு பசில் தலைமையிலான உயர்மட்ட குழு டெல்லி விரைகின்றது:
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும், நாடாளு மன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று வெகு விரைவில் புதுடில்லி செல்கின்றது.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த தி.மு.க, காங்கிரஸ் எம்.பிக் கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தங்களின் இலங்கைப் பயணம் தொடர்பாக விளக்க மளித்தனர்.
அவர்கள் அப்போதே பஸில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டில்லிக்கு செல்லவுள்ளது. குறித்து பிரதமரிடம் தெரிவித்தனர். பஸில் ராஜபக்ஷ எம்.பி. தலைமை யிலான தூதுக் குழுவினர் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீளக்குடியேற்றம் உட்பட தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக ளக்கு அரசியற் தீர்வு காண்பது குறித்து பேசுவார்கள் என்றும் அவர்கள் பிரதமருக்குத் தெரியப்படுத்தினர்.
0 comments :
Post a Comment