மௌலவி கடத்தல் தொடர்பாக அதாவுல்லாவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு நீண்டநேர அறிவுறுத்தலின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட மௌலவி எஸ்.எல்.எம் ஹனிபா (மாதனி), அமைச்சர் அதாவுல்லா உட்பட மூவருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார்.
றம்ஸான் மாதமான செப்டம்பர் மாதம் 16ம் திகதி மௌலவி நோம்பிருந்த சமயத்தில் அவரது வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்த அமைச்சர் அதாவுல்லாவின் ஆட்கள் என நம்பப்படும் ஆயுததாரிகள் மௌலவியை பலவந்தமாக கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மௌலவியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோது அக்கரைப்பற்று பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மௌலவியினால் கூறப்படுகின்றது.
இதையடுத்து சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் மௌலவி ஹனிபா சார்பாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அமைச்சர் அதாவுல்லா, பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவில் தனது கட்சிக்காரார் கடத்தப்பட்டது (1) அடிப்படை மனித உரிமை மீறல் என நீதி மன்று தெரிவிக்கவேண்டும் எனவும் (2) கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் (3) கட்சிக்காரருக்கு நஸ்ட ஈடு (4) வழக்கு மற்றும் ஏனைய செலவுகளும் வழங்கப்படவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment