Monday, October 26, 2009

நான் அரசியலில் இறங்குவது குறித்து எனது பெற்றோரிடம் எவ்வித முடிவும் இல்லை. நாமல்

"இளையோருக்கு நாளை" எனும் அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி மஹிந்து ராஜபக்ச வின் புதல்வருமான நாமல் ராஜபக்க தான் அரசியலில் இறங்குவது குறித்து எனது பெற்றோரோ, நானோ இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதத்திரக் கட்சியின் இளையோருக்கு நாளை எனும் அமைப்பின் வருடாந்த நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய அவ்வமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச, தான் இவ்வமைப்பினூடாக அரசியலினுள் நுழையவுள்ளதாக வதந்திகளை பரப்பியும், பரப்ப முயன்றும் வருகின்றனர். ஆனால் எனது அரசியல் பிரவேசம் தொடர்பாக நானும் எனது பெற்றோரும் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com