Saturday, October 3, 2009

குருநாகல் குண்டுவெடிப்புக்கு பொறுப்பான இராணுவ சார்ஜன்ட் கைது.

குருநாகல் பிரதேசத்தில் நேற்றுக்காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் ஒன்றினுள் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பொறுப்பான இராணுவச் சார்ஜன்ட் ஒருவர் குருநாகல் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பில் 12 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவில் கடமை புரியும் குறிப்பிட்ட இராணுவச் சார்ஜன்ட் குண்டு வெடித்த இடத்திற்கு அண்மையில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து அவ்விடத்திற்கு சென்று குண்டினை பொருத்தி விட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது. அத்துடன் அக்குண்டினை தானே பொருத்தியதாக சார்ஜன்ட் ஏற்றுக்கொண்டுள்ளாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com