Saturday, October 3, 2009

காந்தியின் கொள்கைகளை பின்பற்ற ஒபாமா அழைப்பு

காந்திஜியின் சிந்தனைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, காந்திஜியை நேசிப்பவர்; அவரது கொள்கைகளை மதிப்பவர். தன்னுடைய செனட் அலுவலகத்தில் காந்திஜி படத்தை வைத்திருந்தவர். கடந்த 2007ம் ஆண்டு முதல் காந்தியடிகளின் பிறந்த நாளை, சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா., அனுசரித்து வருகிறது.

இதையொட்டி ஒபாமா கூறியதாவது: காந்தியடிகள் அகிம்சை போராட்டத்தின் மூலமே இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர். இவர் வழிமுறையை பின்பற்றியவர் மார்ட்டின் லூதர் கிங். காந்திஜியின் சித்தாந்தத்தை பின்பற்றி அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கத்தின் மூலம் நமது சமூகத்தை மாற்றியமைத்தவர் மார்ட்டின் லூதர் கிங். இதன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்துக்கு இந்தியா வழிகாட்டியாக அமைந்துள்ளது. காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ நாம் உறுதி கொள்ள வேண்டும்; அனைவரையும் மதித்து போற்ற வேண்டும். காந்தியடிகள் போதித்த அகிம்சை முறை, இன்று உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப் படுகிறது. பொறுமை, அகிம் சையை பின்பற்றி நீதியை போதித்த அவரை இந்த நன்னாளில் நினைவு கூர்வோம். இவ்வாறு ஒபாமா கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com