Saturday, October 3, 2009

Benita Ferrero-Waldner உடன் பசில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் நேச நாடுகளுடனான வெளிவிவகார தொடர்பகத்தின் ஆணையாளர் Benita Ferrero-Waldner அவர்களை பாரளுமன்ற உறுப்பனர் பசில் ராஜபக்ச அவர்கள் புருஸெல் இல் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது இலங்கையின் வடக்கே வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் துரித கதியில் மீள் குடியமர்த்தப்படவேண்டும் என வலியுறுத்திய Benita Ferrero-Waldner அவர்கள், இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு இலங்கை அரசிற்கு தேவையான ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com