Saturday, October 3, 2009

ஆழும்கட்சி வேட்பாளர் பொலிஸாரினால் கைது.

தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களில் ஒருவரான சரத் வீரவன்ச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஜே.வி.வி ஆரவாளர்கள் மீது தாக்குதல் நாடாத்திவிட்டு தப்பி ஓடும்போது பிற்றபட்டற பொலிஸாரினால் சரத் வீரவன்ச, அவரது ஆதரவாளர்கள் குழுவொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத் வீரவன்ச, ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்று மக்கள் சுதந்திர முன்னணி எனும் அமைப்பொன்றை நிறுவியுள்ள விமல் வீரவன்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பாக மொறவக்க பொலிஸில் ஜேவிபி யினர் முறையிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com