Saturday, October 3, 2009

இராணுவச் சமையல்காரன் சுட்டதில் இரு சிப்பாய்கள் மரணம். ஓருவர் படுகாயம்.

மன்னார் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு குறிப்பிட்ட இராணுவ முகாமில் சமைக்கப்பட்டிருந்த உணவு திருப்தி அளிப்பதாக இல்லை என சிப்பாய்கள் சமையல்காரரை திட்டி உள்ளனர். அப்போது ஆதிரமடைந்த சமையல்காரன் தன்னருகில் இருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து தாறுமாறாக துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு முகாமில் இருந்து தப்பியோடியுள்ளார். நேற்று இரவு 10.30 மணியில் இருந்து அப்பிரதேசத்தை சுற்றி வளைத்து இராணுவத்தினர் சல்லடை போட்டு தேடிவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com