Sunday, October 25, 2009

அமைச்சர்களை நான் எங்கே சந்திக்கின்றேன் என எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாது.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். ஆனால் நான் அவர்களை எங்கே சந்திக்கின்றேன் என்பது எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாது என எதிர்கட்சித் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற அமர்வில் பேசிய அவர் தான் எங்கே அமைச்சர்களைச் சந்திக்கின்றேன் என்ற விடயத்தை விசேட பொலிஸ் பிரிவினர் ஆராய்து வருவதாகவும் அவர்கள் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முனைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், பொலிஸார் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பாக வினாவுவதை விடுத்து தன்னிடம் கேட்டிருந்தால் சரியான தகவல்களை வழங்கியிருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் விசேட பொலிஸ் பிரிவினர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததான குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் கூரே யை நான் சந்திதுள்ளேனா எனவும் எனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் கேட்டுள்ளனர். ஆனால் அரசின் அமைச்சர்கள் பலருக்கும் இக்கேள்வி பொருத்தமானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com