Sunday, October 25, 2009

அக்கரைப்பற்றில் பெண் புலி உறுப்பினர் ஒருவர் கைது: கொழும்பில் இருவர்.

அக்கரைப்பற்று 5ம் மைல்கல் பிரதேசத்தில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். பிரதேச மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பில் இரு புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வழங்கிய தகவல்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com