பாதுகாப்பு அமைச்சு: குறை நிரப்பு பிரேரணை நிறைவேற்றம்
பாதுகாப்பு அமைச்சுக்கு மூவாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு கோடியே 66 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பிரேரணையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும், ஒழுங்கும் அமைச்சுக்கென 570.8 மில்லியன் ரூபாவும் இலங்கை இராணுவத்துக்கு 1968.1 மில்லியன் ரூபாவும் கடற்படைக்கு 7374.3 மில்லியன் ரூபாவும், விமானப் படைக்கு 2950 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக் களத்துக்கு 1640 மில்லியன் ரூபாவும், சிவில் பாதுகாப்பு திணை க்களத்துக்கென 1630.5 மில்லியன் ரூபாவும் குறைநிரப்பு தொகை யாக வழங்கப்படுகிறது.
0 comments :
Post a Comment