Tuesday, October 20, 2009

முத்து கெட்டிகம சிறிலங்க சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றார். மைத்திரிபால.

காலி மாவட்டத்தில் மாகாண சபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிசாந்த முத்துகெட்டிகம கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கட்சியின் அக்மன பிரதேச அமைப்பாளர் பதவியில் இருந்து முத்துகெட்டிகம நீக்கப்பட்டுள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒழுக்காற்று விசாரணை நாடாத்தவேண்டிய தேவை இல்லை. ஆனால் கட்சியில் இருந்து விலக்குவதற்காக அவர்மீது ஒழுக்காற்று விசாரணை இடம்பெறும். அவருக்கான குற்றப்பத்திரிகை தயார் படுத்தப்பட்டுள்ளது. அவர் மீது, தேர்தல் காலங்களில் அவர் நடந்து கொண்ட விதம், தெரிவத்தாட்சி அலுவலரை மிரட்டியமை, ஐக்கிய தேசியக் கட்சி தலைவரை சந்தித்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்றார்.

அத்துடன் முத்துகெட்டிகம கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், தனது உயிருக்கு தான் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் கனடா, சுவிற்சர்லாந்து அல்லது இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் ஒன்று தனக்கு அரசியல் தஞ்சம் தந்துதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com