Friday, October 16, 2009

கிண்ணியா பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கிண்ணியா பாலம் எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இப்பாலத்தினை அமைப்பதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் நிதி உதவி வழங்கியிருந்தது.

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேங்களுக்குச் செல்வதற்காக வள்ளங்களைப் பாவித்த மக்கள் எதிர்காலத்தில் இப்பாலத்தினுடாக சுயமாக சென்றுவரமுடியும். குறிப்பிட்ட பிரதேச மக்களின் பல நாள் கனவு நனவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே நேரம் ஓட்டமாவடி பாலத்தின் வேலைத்திட்டங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி திணைகளத்தினால் அது மிகவிரைவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com