இராணுவச் சீருடடையணிந்த கொள்ளையனின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.
வவுனியா சாமரக்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு 9 மணியளவில் இராணுவச் சீருடையை ஒத்த உடை ஒன்றில் சென்ற கொள்ளையன் ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறிப்பிட்ட கொள்ளைக்காரன் வீடொன்றினுள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு அடுத்த வீட்டிற்கு சென்றபோது பிரதேச மக்கள் அவனை சுற்றி வழைத்து பிடிக்க முற்பட்டபோது அவன் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு ஓடித்தப்பியுள்ளான்.
குறிப்பிட்ட கொள்ளைக் காரனை இனம் காண்பதற்கு வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment