Thursday, October 1, 2009

சர்வதேச சிறுவர் தினம்:சரணடைந்த சிறுவர், சிறுமியர் கலந்துகொண்ட நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்திலிருந்து சரணடைந்த சிறுவர், சிறுமியர் பங்குபற்றும் நிகழ்வொன்று நேற்று வவுனியாவில் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மேற்படி சரணடைந்தவர்களுள் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றினர். இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 500 பேருள் 198 சிறுவர், சிறுமியர்கள் சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com