Thursday, October 1, 2009

மனிதாபிமானப் பணிகளுக்காக 196 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை 196 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிதியை கொண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பல தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 250000 மக்களை வெகுவிரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு முனைப்புடன் செயற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com