Monday, October 12, 2009

மகின்த சகோதரயாவுக்கு. யஹியா வாஸித் – ( பாகம் – 1 )

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி கனடாவாழ். சிறிலங்காவைச் சேர்ந்த பழம் தின்று கொட்டை போட்ட வியாபாரிகள், இன்வெஸ்டர்கள், வர்த்தக ஆலோசகர்களை சந்திக்க உள்ளதாக இன்றைய ( 10-10-2009 ) டெய்லி மிரர் செய்தி கூறுகின்றது.

Lankan expatriates invited to meet the President next month

The government has invited Sri Lankan expatriate intellectuals, entrepreneurs, professionals and all others who are willing to contribute to the development the country to meet President Mahinda Rajapaksa next month.

An invitation issued by the Sri Lankan High Commission in Canada to Sri Lankan expatriates in the country said the meeting with the President will take place on 14th November at Temple Trees.

“His Excellency the President of Sri Lanka has expressed his keen interest and desire to meet with and address Sri Lankan expatriate intellectuals, entrepreneurs, professionals and all others who are willing to contribute to the development of our mother land. This invitation is in keeping with the pledge made by His Excellency in the immediate aftermath of the country’s liberation from terrorism and the speech made on the 61st Independence Day commemorations to provide an opportunity to those who left the country due to terrorist atrocities,” the invitation said.

At the scheduled meeting all attendees will be provided with an opportunity to meet and discuss with the representatives of the Banking, Financial Investment, Tourism as well as various other State and private institutions. (RR)


நல்லது. ஏற்கனவே இவ்வாறு பலர் வந்து போனதாகவும், அமைச்சர்களும், அமைச்சு செயலாளர்களும் அந்த முதலீட்டாளர்களையும், வர்த்தக ஆலோசகர்களையும், வியாபார ஆர்வமுள்ளவர்களையும் சந்தித்ததையும் நாம் அறிவோம். நம்மவர்களும் அறிவார்கள். ஆனால் இவை பாரிய வெற்றியளிக்கவில்லை என்பதையும் காற்றுவாக்கில் கேள்வியுற்றோம்.

ஏன். அமைச்சரும், அமைச்சு அதிகாரிகளும் அவர்களைச் சந்தித்து, நீங்கள் நமது நாட்டில் முதலிடுங்கள், உங்களுக்கு பல ஏற்று மதி வரிச்சலுகை, மூலப்பொருள் இறக்குமதி வரிச்சலுகை, உங்கள் பணத்தை எமது நாட்டுக்கு தருவிப்பதற்கு வரிச்சலுகை, உங்களுக்கு சிறிலங்கா பிரஜையாக மாறுவதற்குரிய அனுமதி, முதலீட்டுச் சபையில் ( பீ.ஓ.ஐ ) உங்களை நிரந்தர உறுப்பினராக மாற்றுவதற்குரிய இலகு வழி, உற்பத்தி இயந்திரங்களை இறக்குமதி செய்ய உடனடி அனுமதி என நிறைய விடயங்களை சொல்லியுமுள்ளனர்.

ஆனால், அப்படி வருபவர்களிடம், ஏற்றுமதி லைசன்ஸ் எடுப்பது எப்படி, பீ.ஓ.ஐ ( போர்ட் ஒப் இன்வைஸ்ட்மென்ட் ) அனுமதி எடுப்பது எவ்வாறு, சிறிலங்காவில் எத்தனை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றது, மன்னாரில் இருந்து மீன் இறக்குமதி செய்ய விரும்புகின்றோம் எப்படி ஆரம்பிப்பது, உடனடியாக எங்களுக்கு வாசிங்கடனில் உள்ள ஒரு கம்பனிக்கு மாதத்துக்கு தலா ஆயிரம் மெற்றிக் டண் பலாப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம் இறக்குமதி செய்ய விரும்புகின்றோம் அதன் புறசீஜர் என்ன, சிறிலங்காவில் கார்கோ ( எயார் கார்கோ / சீ கார்கோ ) கட்டணங்கள் எவ்வாறு இருக்கின்றது, சிறிலங்காவில் இருந்து மரத்தளபாடங்கள் இறக்குமதி செய்ய முடியுமா எனக்கேட்டால், ஈ.டி.பி ( எக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் போர்ட் ), ஐ.டி.பி ( இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் போர்ட் ), பீ.ஓ.ஐ ( போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் ) போன்றவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என வெகு ஈசியாக சொல்லி விட்டு மறைந்து விடுகின்றனர்.

அப்புறம் ஒரு கெட்ருகதர், பார்ட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுத்தல் என ஒரு சம்பிரதாயமும் அரங்கேறுகிறது.

போதாது, இது எங்களுக்கு போதாது, இந்த விளக்கம் எங்களுக்கு போதவே போதாது. நாங்கள் இங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், உங்களை திட்டினாலும், புகழ்ந்தாலும் ஒவ்வொரு வினாடியும் அங்கு நல்லது நடக்க வேண்டும், நல்ல படியாக நாடும், நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் மூச்சு விட வேண்டும், அதை இந்ந மகின்த சகோதரயாவாவது எங்களுக்கு செய்து காட்ட வேண்டும் என இறைவனை மன்றாடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு இந்த இன்டலக்சுவல், என்டர்பிரீனியஸ், புறபோசனலிஸ்ட், இன்வெஸ்டர் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. நாங்களெல்லாம் மூன்றாம் கிளாஸ்காறர்கள். எங்களிடம் பணம் இருக்கின்றது. வியாபாரிகளிடம் முதலீட்டாளர்களிடமும் தொடர்பு இருக்கின்றது. என்ன பொருளை எங்கு விற்கலாம், சிறிலங்காவில் உள்ள உற்பத்தி பொருட்களை அதி கூடிய விலைக்கு எந்த கம்பனிகளுக்கு விற்கலாம் என்ற விபரமும் விரல்நுனிகளில் இருக்கின்றது.

ஆனால் இங்கு புலம் பெயர்நாடுகளில் இருந்து கொண்டு எவ்வாறு நாங்கள் இவைகளை செய்வது என்பதில்தான் பாரிய சிக்கல்களே இருக்கின்றது. உதாரணமாக அண்மையில் ஐரோப்பாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, மாதத்துக்கு நான்கு கன்டய்னர்கள் வீதம் ஜெக்கட் தேவையேற்பட, அக்கம்பனியில் பேர்ச்சசிங் ஒபீசராக இருக்கும் நம்மவர், இதை நமது நாட்டில் இருந்து தருவிக்கலாமே என்ற நப்பாசையில், தூதுவராலய கொமர்சியல் டிவிஷனை தொடர்பு கொண்ட போது, அவருக்கு அங்கு உரிய அங்கீகாரமோ, பதிலோ கிடைக்கவில்லை. அடுத்த நாள் அவர் பங்களாதேஷ் தூதுவராலய கொமர்ஷியல் டிவிஷனை தொடர்பு கொண்ட போது, அவருக்கு அங்கு ராஜமரியாதை கிடைத்ததுடன், இரண்டே வாரத்தில் பொருட்களையும் சப்ளை பண்ண தொடங்கியுள்ளார்கள். எனவே,

நீங்கள் முதலிட ஆர்வமுள்ளவர்களை அங்கு அழைக்கும் போது, உங்களுடன்

ஏற்றுமதி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் ( ஈ.டி.பீ ) இருந்து ஒரு அதிகாரியை அழைத்து வாருங்கள். சிறிலங்காவில் இருந்து என்ன பொருட்கள் ஏற்று மதியாகின்றது, எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது, அக்கம்பனிகளின் விபரங்கள், எந்தெந்த மூலப் பொருட்கள் சிறிலங்காவில் விழைகின்றது, இதற்கு எவ்விதமான ஆதரவினை ஈ.டி.பி, வளங்குகின்றது என்ற சகல விபரங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளவராக அவர் இருக்க வேண்டும்.

இன்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட்டிலிருந்து ஒரு அதிகாரியை அழைத்து வாருங்கள். சிறிலங்காவில் உள்ள தோல் லெதர் பெக்டறிகள், செரமிக் பெக்டறிகள், கைத்தறி,கைப்பணி பெக்டறிகள், ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்து தயாரிப்பாளர்கள் பற்றிய முழுவிபரம், எவ்வகையான இயந்திரங்களை வைத்து தங்கள் கம்பனிகளை இயக்குகின்றார்கள், அவர்களுக்குரிய சிறிய பாரிய இயந்திரங்களை எங்கிருந்து தருவிக்கின்றார்கள், சிறிலங்காவில் இவற்றுக்குரிய இயந்திர தயாரிப்பாளர்கள் உள்ளார்களா, அவ்வாறு இயந்திங்கள் தயாரிப்பவர்களுக்கு எவ்வித உதவிகளை இன்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட் வழங்குகின்றது. றீஎக்ஸ்போர்ட்டுக்காக நாங்கள் பொருட்களை அனுப்பினால் அவைகளை பினிசிங் புறடக்ட்டாக மாற்றும் வல்லமை சிறிலங்கன் இன்டஸ்ரியலிஸ்ட்டுகளுக்கு உண்டா என்ற விபரங்களை நாக்குநுனியில் வைத்துள்ளவராக அவர் இருக்க வேண்டும்.

எயார் கார்கோ, சீகார்கோ சந்பந்தப்பட்ட ஒரு அதிகாரியை அழைத்து வாருங்கள். இதில் எங்களுக்கு நிறைய சந்தேக கேள்விகள் இருக்கின்றது. அன்னாசிப்பழம் அனுப்ப ஒரு விதியும், மீன் அனுப்ப இன்னொரு சட்டமும், துணிவகைகள் அனுப்ப வேறொரு புறசீஜரும் இருப்பதாக ஒவ்வொரு கார்கோ காறரும், ஒவ்வொரு கதையாக சொல்லி எங்கள் ஏற்றுமதி / இறக்குமதி ஆசைக்கு சங்கூதி விடுகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு பூரண விபரம் தேவை.

கனடா மட்டுமல்ல. அனைத்து நாடுகளிலுமுள்ள ஆர்வமுள்ள அனைவரையும் அழையுங்கள். அரபுநாடுகளில் நமது இளைஞர்கள் பல மில்லியன் டாலர் புரளும் வியாபார நிறுவனங்களில் பேர்ச்சசிங் அதிகாரியாக இருக்கின்றனர். உதாரணமாக கட்டாறில் கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்ட பாரிய நிறுவனங்களில், சிறிலங்கன் இளைஞர்கள் கொள்வனவு உயரதிகாரிகளாக இருக்கின்றனர். அவர்கள் நினைத்தால், புடலங்காயிலிருந்து மாணிக்கக் கற்கள் வரை நம் நாட்டிலிருந்தே இறக்குமதி செய்யலாம்.

போதாது, போதாது, எதுவுமே போதாது. முதலீட்டாளர்களே வாருங்கள் என்ற விளம்பரம் போதாது, முதலிடுவதால் நமது நாட்டுக்கு, நமது எதிர்கால சந்ததிக்கு என்ன பயன் என்ற அறைகூவல் போதாது, முதலிட வாருங்களேன் என்ற கோஷம் காதும், காதும் வைத்தது போல் இருக்கின்றது. அது போதாது. உலகம் முழுவதும் உள்ள நமது தூதுவராலயங்களூடாக ஒவ்வொரு சிறிலங்கனின் காதிலும் இச்செய்தி பரவ வேண்டுமே என்ற சிறிலங்கா அரச நிர்வாகத்தின் சங்கொலி போதாது.

உங்களை கைபிடித்து வழிநடக்க நாங்கள் தயார்

எங்களை கை கொடுத்து வழி நடாத்த நீங்கள்தயாரா ?


( தொடருவேன்....)


12-10-2009

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com