Tuesday, September 8, 2009

மஸ்கெலிய யுவதிகளின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தை கால்வாய் ஒன்றினுள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட மஸ்ககெலிய யுவதிகள் இருவரதும் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நபருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் வயது குறைந்த இருவரையும் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தியமை மற்றும் இறந்தவர்களின் சகோதரி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்தமைபோன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் இறந்த யுவதிகளின் பெற்றோர் மரணம் தொடர்பாக தமது பலத்த சந்தேகத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் சந்தேக நபர்மீது கொலைக்குற்றஞ் சுமத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பில் மிகவும் செல்வாக்கு மிக்க குறிப்பிட்ட நபர் தனது செல்வாக்குகளைப் பிரயோகித்து கொழும்பு மரண வைத்திய பரிசோதனை அதிகாரிகள் முதல் சகல தரப்பினரையும் விலைக்கு வாங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com