Monday, September 7, 2009

ஈரானின் அணுசக்தி உரிமையை யாரும் பறிக்க முடியாது: அதிபர் அகமதிநிஜாத்

ஈரான் அணுசக்தி ஆயுதங்களை தயாரித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து ஈரான் அதிபர் அகமதிநிஜாத் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரானைப் பொறுத்தவரை அணுசக்தி என்ற கேள்வி முடிந்து போன ஒன்று. எங்களின் அணுசக்தி உரிமையை யாராலும் தடுக்க இயலாது. இது தொடர்பாக வேண்டுமானால் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அது நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். அணுசக்தி மின்சாரம் மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஆகியவை தொடர்பாக பேசினால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம். பேச்சு வார்த்தை தொடர்பான சந்திப்பு இந்த மாதம் நடக்கும் ஐ.நா.சபையில் கூட்டத்தில் நடத்தப்படவேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com