Wednesday, September 23, 2009

புலிகளின் பணமும், சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிரான பயன்பாட்டில்

2வது சவாலையும் முறியடிக்கும் முயற்சியில் அரசு
பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக ஒழிக் கும் முதலாவது சவாலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த எமது அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்கும் இரண்டாவது சவாலை முகம்கொடு க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறிய தாவது,

இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்பட்ட போதும் 29 வருடங்களாக புலிகள் திரட்டிய பெருமளவு பணம் இன்னும் காணப்படுகிறது.

இது தவிர புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பும் இன்னும் ஒழிக்கப்பட வில்லை. இதனால் எமது நாட்டுக்கு எதிரான சர்வதேச அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகிறது.

புலிகளின் அழுத்தம் காரணமாக அமெரி க்க செனட் சபையில் இலங்கைக்கு எதி ராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட் டுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி அடங்கலான இராணுவ தளபதிகள் அனைவரையும் சர்வதேச யுத்த நீதிமன் றத்தின் முன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட போதும் புலிகளின் அச்சுறுத்தல் முழுமையாக ஓயவில்லை. புலிகளின் பணமும் சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது.

சர்வதேச ரீதியான சவால்களை முகம் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகவும் யுத்த நீதிமன்றத்தின் முன்செல்ல நேரிட்டால் அனைவர் சார்பாகவும் தான் செல்வ தாகவும் சட்டத்தரணிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளை ஒழித்ததால் பெற்ற சுதந்திரத்தை முழு நாடும் இன்று அனுபவிக்கிறது. பெற்ற வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தென்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. சகல தரப்பினரும் ஒன்று பட்டு பெற்ற வெற்றியை பாதுகாக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பணம் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீதிகளின் தரத்திற்கு அம் பாந்தோட்டையிலுள்ள வீதிகள் அபிவிரு த்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள் என்பனவும் சிறந்த நிலையில் உள்ளன.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் முன்னரை விட அதிகமாக அபிவிருத்தி பணிகள் இட ம்பெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ள னர். பின்தங்கிய பகுதிகள் யாவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி 2/3 பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் 3/4 க்கு நேருக்கமான வாக்குகளை பெற்றது. அதனைவிட கூடுதல் பெரும்பா ன்மையுடன் தென்மாகாண சபைத் தேர் தலில் வெற்றிபெறுவதே எமது நோக்கமாகும்.

இறுதியாக நடைபெறும் தென்மாகாண சபைத் தேர்தல் ஏனைய இரு பிரதான தேர்தல்களுக்கும் சிறந்த அடித்தளமாக இருக்கும். யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெருமளவு வெளிநாட்டவர்கள் இலங்கை யில் முதலீடு செய்து வருவதோடு வெளி நாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித் துள்ளது.

இதனால், தொழில்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பிரான்ஸிலுள்ள பல முக் கிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன என்றார்.

இங்கு உரையாற்றிய தெஹிவளை- கல் கிஸ்ஸ மாநகர சபை பிரதி மேயரும் தெஹி வளை சு.க. அமைப்பாளருமான தனசிரி அமரசேகர கூறியதாவது,

நான் பெலியத்தை பிரதேசத்தில் பிராச ரப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ளேன். அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மன்னணி மகத்தான வெற்றியீட்டும். தென் மாகா ணத்தில் நாம் 85 வீத வாக்குகளை பெறு வோம் தென் பகுதி மக்கள் அரசாங்கத்துட னேயே உள்ளனர். இப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.

ஐ.தே.க. வுக்கு தென்பகுதி மக்கள் இம் முறை நல்ல பாடம் புகட்டுவர். ஐ.தே.க. வின் ஓரிரு கூட்டங்களே நடைபெறுகின் றன. ஐ.தே.க. கூட்டங்களில் பங்குகொள்ள எவரும் முன்வருவதில்லை என்றார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com