Thursday, September 24, 2009

பிரதி அமைச்சரின் மகன் தாக்கியதில் பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்.

அனுராதபுரப் பிரதேசத்தில் பிரதி அமைச்சர் எக்கநாயக்க வின் மகன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நீதிமன்று அமைச்சரின் மகன் ரசிக்க எக்கநாயக்கவின் வீட்டினை சோதனை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

பொலிஸாருக்கும் அமைச்சரின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இச்சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com