Tuesday, September 29, 2009

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் ஜெனீவாவில் பேச்சு

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கென ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (29) அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் எந்தோனியோ கெட்டஸ¤டன் பேச்சு நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது. ஜெனீ வாவில் நடைபெறும் அகதிகளுக் கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் நிறை வேற் றுக்குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டு ள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com