Tuesday, September 29, 2009

முரளிதரன் ஜேர்மன் சுற்றுலா.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நியமன எம்பி யும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஜேர்மன் நாட்டிற்கு சுற்றுலாச் சென்றுள்ளார். இருவாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இச்சுற்றுலாவில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சாந்தினி அவர்களையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முரளிதரனுக்கான ஜேர்மன் நாட்டு சுற்றுலா வீசா ஜேர்மன் நாட்டவர் ஒருவரின் உத்தராவாதத்தின் பேரில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட ஜேர்மன் நாட்டவர், சுனாமி அனர்த்தங்களின் போது ஆனாதைகளான சிறார்களை இலங்கையில் பராமரித்துவருபவராகும். கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் சர்வதேச மட்டத்திலான தராதரங்களுடன் பாடசாலை ஒன்றையும், விடுதி ஒன்றையும் அமைத்து சுனாமியின் போது நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அங்கு பராமரிக்கப்படுகின்றனர். இந் நல்லெண்ண திட்டத்தின் கீழ் கிழக்குமாகாணத்தில் இருந்தும் சுமார் 15 மாணவர்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆனால் இவ்வாறான தனவந்தர்களிடம் பிரதேச மக்களின் அபிவிருத்தி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உதவிகளைப் பெறுவதற்கு பதிலாக அமைச்சர் முரளிதரன் தனது சுற்றுலா ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளமை அவருடன் இணைந்து செயற்பட்டு வருவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் முரளிதரனது ஜேர்மன் சுற்றுலா விடயம் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன், இவருடன் இணைந்து வேலை செய்து வருபவர்களுக்கு, முரளிதரன் தென்மாகாணசபை தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com