Monday, August 17, 2009

தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைப் புலிகளை பெற்றோர் கண்ணீர் பெருக சந்தித்தனர்.

புலிகளினால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைப் புலிகள் பலர் வன்னியுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்தும், இறுதி யுத்தத்தில் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளனர். இவர்கள் யாவரும் கொழும்பில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்பேபுஸ்ஸ என்ற இடத்திலும் வேறு சில இடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைப் புலிகளில் 110 பேரது பெற்றோர் அவர்களை முதற்தடவையாக சந்தித்து பேசினர். பெற்றோர் தமது குழந்தைகளைக் கண்டபோது மிகவும் உணர்சிவசப்பட்டு கண்ணிர் பெருக அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டு ஓலமிட்டதை காணமுடிந்துள்ளது. இன்றும் எத்தனையோ பெற்றோர் தமது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என தெரியாது இருக்கின்ற நிலையில் மேற்படி சந்திப்பு குறிப்பிட்ட பெற்றோருக்கும் அக்குழந்தைப் போராளிகளுக்கும் பாரிய சந்தோசத்தை கொடுத்துள்ளதுடன் அவர்கள் தமது வாழ்வின் ஓர் திருப்பு முனையை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பிற்கு சென்ற பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்களையும் கொண்டு சென்று அவர்களுடன் சேர்ந்து பல மாதங்கள், வருடங்களுக்கு பின்னர் உண்டு மகிழ்ந்தாக கூறப்படுகின்றது.

1 comments :

Srilankan August 18, 2009 at 5:48 AM  

Whatever happened, happened for the good;
Whatever is happening, is happening for the good;
Whatever will happen, will also happen for the good only.
You need not have any regrets for the past.
You need not worry for the future.

இருபத்தைந்து வருடத்திற்கு முன் துவக்கு இருந்தால் இயக்கம் கட்டலாம்
யாரையாவது சுட்டு கொன்றால் இயக்கத் தலைவன், தளபதி ஆகலாம்.
சோவியத் யூனியன் பிளவு படும் ஜேர்மன் சுவர் விழும் என்று எண்பதுகளில் இருந்த தம்மை அரசியல் ஆய்வாளர்களாக சொன்னவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை

இருபத்தோராம் நூற்றாண்டில் தம்மை அரசியல்விற்பன்னர்களாக சொல்லிக்கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துவிடும் என்று புரிந்திருக்கவில்லை. இப்போ ஊரை ஏமாத்தி காசுசுத்தினால் ரேடியோ டிவி பத்திரிகை நடத்தலாம் . இவர்களுக்கெல்லாம் மீடியாவுக்கு இருக்க வேண்டிய தர்மம், ஒழுக்கம் சமூகக் கடமை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. மாறிமாறி மாலை போட்டு பொய்களையே சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.

கில்லாடிகளையும் கொலைகாரர்களையும் கள்ளக்கடத்தல்காரர்களையும் காசு அடிப்பவர்களையும் பெரிய சுளியர் என்று தலையில் தூக்கிவைத்து கூத்தாடும் பீலாக்கூட்டம் இந்த யாழ்ப்பாணிகள். நம்பவேண்டியதை நம்பாமல் நம்பக்கூடாத்வர்களை நம்பும் யாழ்ப்பாணிகளுக்கு இந்த சுத்துமாத்து ஏமாத்து மீடியாகாரர்தான் சரி.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com