Monday, July 20, 2009

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

அமைச்சர் முரளிதரன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சுவிற்சலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி நிற்கும் நிலையில் இலங்கை அரசு அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளபோதும் கருணா தனது சொந்தப் பணத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளரான சாந்தி விருட்சி பெரேரா, அவரது மகன், கருணாவின் சகோதரி மற்றும் அவரது 3 சகாக்களுடன் சுற்றுப்பயணம் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்திற்கான சுவிஸ் வீசா இதுவரை வினியோகிக்கப்படவில்லை என கருணாவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அதே நேரம் கட்சியின் உறுப்பினர்களுக்கான சம்பளம் கடந்த இருமாதங்களாக வழங்கப்படவில்லை என அங்குள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு மாதாந்தம் ஊதியம் வழங்கி வருகின்றது. அச்சம்பளப் பணத்ததை இருமாதங்களாக வழங்காத அமைச்சர் அப்பணத்தில் இச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதையிட்டு அங்குள்ள உறுபினர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

உறுப்பினர்களது சம்பளப்பணம் வழங்கப்படாமையால் அவ்வுறுப்பினர்களது குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்கள் இவ்விடயத்தை அரச தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இன்று இலங்கை நிலவரங்களினால் பல விதமான அச்சமும், பதட்டமும் புலம்பெயர்தேசத்தில் நிலவுகின்ற நிலையில் கருணா அங்கு விஜயம் செய்யும் போது மக்கள் மிகவும் கொதிப்படைந்து வன்செயலுக்கு அது வித்திடலாம் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் இச்சுற்றுலாவிற்கு இலங்கை அரசினால் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவரும்நிலையில் இக்குழுவிற்கான பிரயாணப்பணம் இலங்கையில் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் நலனிற்கு பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுவதுடன் வன்னி மக்களின் நிவாரணதேவைகளுக்காக சிங்கள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த சம்பளத்தை ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1 comments :

Jimmy July 22, 2009 at 2:46 AM  

traitor Karuna is going to go to swiss for his honeymoon with his private secretary/lover shanthi. She is a prostitute. She hasn't had a husband for 20 years, has a son who is 20 years old. she has slept with all srilankan ministers. This honeymoon was specially arranged by karuna amman's mother and sisters.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com