Saturday, July 25, 2009

கிழக்கின் பட்டதாரிகளை பிரிவினைவாதம் ஒன்றை நோக்கி தள்ளாமல் வேலையில்லாப் பிரச்சினையைத் தீருங்கள்- ஜேவிபி

கடந்த 22 நாட்களாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்துவரும் 1700 வேலையில்லாப் பட்டதாரிகளது விடயம் தொடர்பாக கடந்த 23ம் திகதி பாராளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசிய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, கிழக்குமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளது பிரச்சினையை தீர்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உடனடியாக ஆணையிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவருடைய அறிக்கையில், கிழக்கு மாணவர்கள் வேலைவாய்ப்பையே கேட்கின்றனர். அவர்கள் தனி ஈழம் கேட்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இவற்றுக்கு எதிராக ஹர்த்தால், சத்தியாகிரகம் என செய்துவந்த அவர்கள், அரசு அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். அம்மாணவர்கள் ஏனைய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போல் வேலைவாய்பை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com