Saturday, July 25, 2009

20 லட்சம் நஸ்டஈடு கோரும் இடைத்தங்கல் முகாம் மக்கள்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் செயல் எனக்கூறி இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிலங்குளத்தில் உள்ள வீரபுரம் எனப்படும் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றின் உறவினர்களே மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவில் குளம் இந்துக்கல்லூரி இடைத்தங்கல் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 9 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு யுத்தத்தில் தற்காலிமாக இடம்பெயர்ந்தோர், அவர்களது விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்து வைக்கப்படுதல் உரிமை மீறல் செயலாகும் எனவும் அவர்கள் தாம் விரும்பிய இடம் ஒன்றில் வாழும் பொருட்டு அவர்களை விடுதலை செய்ய நீதிமன்று உத்தரவிட வேண்டும் எனவும் அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உரிமைகள் மீறப்பட்டமைக்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு 20 லட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் என மன்று ஆணையிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com