Thursday, June 25, 2009

வங்கிக் கொடுப்பனவுக்கான கட்டளையை வாபஸ்பெற்ற நோர்வே மக்கள்.

நோர்வே நாட்டில் வாழும் தமிழ் மக்களில் பலர் போராட்டம் எனும் பெயரால் புலிகளுக்கு பெரும் உதவிகளை செய்து வந்துள்ளனர். புலிகளுக்கு அவ்வாறு பணம் செலுத்தி வந்த மக்கள் மாதாந்தம் தமது கொடுப்பனவுகளை வங்கிகளுடாகவே செலுத்தி வந்தனர். ஒவ்வொரு மாத முடிவுலும் ஒரு தொகைப் பணம் மக்களில் வங்கிக்கணக்கில் இருந்து புலிகளது வங்கிக்கு செல்லும் வகையில் மக்கள் தத்தமது வங்கிகளுக்கு கட்டளையிட்டிருந்தனர்.

கடந்த மாதம் புலிகளின் தலமை முற்றாக அழிக்கப்பட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமை யார்? என்கின்ற தமிழ் மக்களின் நியாயமான கேள்வி எழுவதற்கு முன்பே புலிகளியக்கத்தின் புலம்பெயர் வலையமைப்பு கூறுகளாக பிரிந்தது மட்டுமல்லாது, உதவி செய்த தமிழ் மக்களையும் காட்டிக்கொடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புலிகளின் தலைமையின் கீழ் செயற்பட்ட புலிகளின் முக்கிய பிரதிநிதிகள் சிலர் நோர்வே தேசியத் தொலைக்காட்சில் தோன்றி விடுதலைப் புலிகள் சார்பாக எவராவது பணம் கோரிவந்தால் பொலிஸாரிடம் அறிவியுங்கள் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலைமை உருவாக்கக்கூடிய விபரிதங்களை உணர்ந்த இன்னுமோர் குழுவினர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நாடத்தி நோர்வேயில் உள்ள மக்கள் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்காகவே பணத்தை தந்திருந்தனர் எனும் விடயத்தை கூறியிருந்தனர். அவ்வாறு அவர்கள் கூறியிருந்ததன் உண்மையான காரணம் யாராவது பொலிஸாரிடம் எம்மைக் காட்டிக்கொடுத்தால் நாங்களும், நீங்கள் ஆயுதம் வாங்கவே பணம் தந்ததாக காட்டிக்கொடுப்போம் என்ற மிரட்டலாகும்.

இவ்வாறான சகல விடயங்களையும் அவதானித்த மக்கள் உடனடியாக தாம் வங்கிகளுக்கு வழங்கியிருந்த மாதந்த கொடுப்பனவுகளுக்கான கட்டளையை வாபஸ்பெற்றுள்ளனர். மக்கள் புலிகளுக்கு வழங்கும் பணத்தில் ஆயுதம் வாங்கும் விடயத்தை அவர்கள் அறிநதுள்ளார்கள் என்ற விடயத்தை புலிகள் பகிரங்கமாக அறிவித்த பின்னர், என்றாவது ஒருநாள் பொலிஸார் பணஉதவி செய்பவர்களை விசாரணைக்கு அழைத்து உங்கள் பணத்தில் பயங்கரவாத இயக்கமொன்றிற்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதை நீங்கள் அறிந்திருந்தீர்களா எனக் கேட்டால், மக்களால் இல்லை எனக் கூற முடியாது என்பதை புரிந்து கொண்ட மக்கள் தமது கொடுப்பனவுகளைச் நிறுத்தியுள்ளனர்.

புலிகளின் உள்ளகத் தகவல்களின்படி நோர்வேப் புலிகளுக்கு மாதாந்தம் 3 லட்சம் குரொன்கள் வசூலாகியதாகவும் ஆனால் அந்த தொகை 80 விழுக்காடு வீழ்ந்து இம் மாதம் ஆக 60000 குரோனர்களே வங்கிக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் புலிகள் மக்கள் தரும் பணத்தில் தாம் சட்டவிரோத ஆயுதக் கொள்னவைச் செய்ததாகவும் அவ்விடயத்தை மக்கள் அறிந்திருந்ததாகவும் அறிவித்திருக்கும் நிடையில் சட்டரீதியாக நீருபிக்க கூடிய முறையில் வங்கிகளுடாக பணம் தொடர்ந்தும் செலுத்துவோரது நிலைமை கவலைக்கிடமாகும் என அஞ்சப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com