Friday, June 26, 2009

கிழக்கில் சகல தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படவேண்டும்: இரா.துரைரட்ணம்

"கிழக்கு மாகாணத்தில் அரசியல் பலம் உள்ளவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் உட்பட சகல தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும்" என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் பகிரங்கமாக கோருகின்றார்.

"மக்கள் ஆயுத வன்முறைகள் இன்றி,அச்சம்,பயம் இல்லாமல் வாழ்வதையே விரும்புகின்றார்கள்.கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு,ஆயுத வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டம் ஒழுங்கின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில அரசியல் கட்சி அலுவலகங்களிலோ அல்லது வேறு அரசியல் கட்சி சார்ந்தவர்களிடமோ ஆயுதங்கள் இருப்பது அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.

கப்பம்,கொள்ளை,ஆயுத வன்முறைகள் தொடர்கின்றன என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையான்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com